மழை


அறிவியலுக்கும் ,நாத்திகத்திற்கும் ,ஆத்திகத்திற்கு சவால் விடும் ஒரு பகடிக்காகயாக மாறி நிற்கிறது இயற்கை .
உஷ்ண மூச்சுக்கள் நுரையீரல் நிரப்ப ,
வானம் பார்த்த பூமியாம் என் தாய் தமிழ் நாட்டை பல நாட்களாக வாட்டி, தானம் கேட்கும் நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது மழை .
கானல் நீரை மட்டுமே காட்டி செல்கிறது இந்த வெயிலின் தணல்.
விவசாய நிலங்கள் விலை நிலங்கள் ஆகிப்போக, விவசாயிகள் மண்ணின் உரமாக மாறி வரும் காலத்தை சற்றே கனத்த இதயத்துடன் கடந்து கொண்டிருக்கிறேன் .
தென் மேற்கு பருவமழை , வட கிழக்கு பருவமழை போன்ற சொற்கள் வழக்கொழிந்து போய் விட்டன
குளிர் காற்றை கடக்கும் போது  அருகில் மரம் இருப்பதை உணர்கிறேன் . வானம் குளிர மரம் அவசியம் என்பதை மறந்து அறிவியலின் கண்டுபிடிப்புகளில் தொலைந்து கொண்டிருக்கிறது அடுத்த தலைமுறை.
இயற்கை தனது பழிவாங்கும் படலத்தை நடத்திக்கொண்டிருக்கிறது .
நாம் இயற்கை வளங்களை அழித்தோம் அது நம்மை ஒழிக்க உக்கிரதோடே நம் முன் நிற்கிறது .
இன்னா செய்தாரை ஒறுத்து நன்னயம் செய்ய மாட்டாயோ மழையே !!

No comments:

Post a Comment