அழகர்சாமின் குதிரை

கதை கரு :"ஒரு ஊரில் அழகர்சாமியின் (கடவுள்) பல்லக்கு குதிரை காணாமல் போகிறது அதை தேடி திரியும் வேளையில் ஊர்க்காரர்களிடம் சிக்குகிறது ஒரு அழகர்சாமியின் (அப்பு குட்டி) குதிரை ...அதை அவர்கள் கடவுளின் குதிரையாக நினைக்க......என்ன ஆனது என்பது மீதி கதை"

கடவுளின் பெயரையும் ...ஜாதியின் பெயரையும் வைத்து ஏமாற்றுபவர்களுக்கும் ...ஏமாருபவர்களுக்கும் சவுக்கடி கொடுத்துள்ள படம்.....
தமிழ் சினிமாவை புரட்டி போட வந்துள்ள படம் என்று சொல்ல முடியாது.....நல்ல சினிமா பார்க்கிறோம் என்ற நிம்மதி ஆரம்ப காட்சிகளிலேயே தெரிந்து விடுகிறது.....

மக்களின் மூடநம்பிக்கையை நக்கலும் நய்யாண்டியுமாக சாடியிருக்கிறார் இயக்குனர்.....


அப்புக்குட்டி, குதிரைகாரனாக மட்டுமே அவரை ஏற்றுக்கொள்ள முடியும் ....நல்ல தேர்ந்த நடிப்பு....அவரின் ஜோடியாக !!!! சரண்யா மோகன் ("யோ டைரக்டர் உனக்கு மனசாட்சியே இல்லையா என திரை அரங்கு அதிர்கிறது").ஆண்களின் அழகை மட்டும் சில பார்க்கும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடம்......

தாசில்தார் மகன்,சிலை திருடும் பெரியவர்,கோடங்கி மகள்,ஊர் சிறுவன் ,ஊர் மக்கள் ,படத்துடன் பயணிக்கும் இளைய'ராஜா'வின் இசை ,மூட நம்பிக்கைகளை குட்டும் வசனங்கள் ,துளியும் ஆபாசம் இல்லாத காட்சிகள் என குடும்பத்துடன் பார்க்க கூடிய படம்



The Third Hit in a Row For Suseendran........
Thanks To Sussendran and Cloud Nine and Baskar Shakthi...
-பிரிட்மன்